ஈரான் நீடித்த அமைதியை நோக்கி நகர விரும்புகிறது – அரசாங்க செய்தித் தொடர்பாளர்
ஈரான் போரைத் தொடங்கவில்லை என்றாலும் கணிசமான இழப்புகளைசந்தித்துள்ளதாக, அந்த நாட்டின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானி (Fatemeh Mohajerani) தெரிவித்துள்ளார்.
இந்த மோதலில் உயிரிழப்புகள் மட்டுமின்றி, பொதுமக்களின் வீடுகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்..
மேலும், எதிர்கால பேச்சுவார்த்தைகளில் இழப்பீடு முக்கிய கோரிக்கையாக இருக்கும் என்றும், ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு மற்றும் பொருளாதார தடைகள் நீக்கம் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஈரான் நீடித்த அமைதியை நோக்கி நகர விரும்புகிறது என்றும் அந்த நாட்டின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.





