இலங்கை செய்தி

இலங்கையில் வீடொன்றுக்குள் பெண்கள் செய்த அதிர்ச்சி- சுற்றிவளைத்த பொலிஸார்

கடுகன்னாவ, கந்தகம பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து தேங்காய் விற்கும் போர்வையில் பாரிய அளவில் போதை வஸ்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதாள உலக கோஷ்டியினர் என சந்தேகிக்கப்படும் மூன்று பெண்கள் உட்பட 5 பேரை கடுகன்னாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் குறித்த வீட்டை சுற்றிவளைத்த போது சந்தேக நபர்களிடம் இருந்து 33 கைத்தொலை பேசிகள், 3 வேன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 9 வாகனங்களுக்கான வருமானம் மற்றும் காப்புறுதி பத்திரங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.

ஈ-கேஷ் மூலம் போதை வஸ்து விநியோகிக்கும் இந்த சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட வீட்டை 25000 ரூபாவுக்கு வாடகைக்கு எடுத்து போதை வஸ்து வர்த்தகத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 5340 மில்லிகிராம் போதை வஸ்தையும் 62800 ரூபா பணத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர் .

பொலிசார் சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!