செய்தி தமிழ்நாடு

விவசாயத்தில் அசத்தும் பொறியியல் மாணவிகள்

காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காயிரம் மாணவ மாணவிகளின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மாபெரும் கண்காட்சி விழா சவிதா பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

பல்வேறு முன்னணி தொழில் நிறுவனர்கள் , உற்பத்தியாளர்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படைப்புகளை விளக்கினர்.

குறிப்பாக பொறியியல் படிக்கும் மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே ட்ரோன் தொழில்நுட்பம் மூலம் வெண்டைக்காய் பயிர் செய்து உற்பத்தியை பெருக்கி விவசாயத்தில் அசத்தியுள்ளனர்.

டிரோன் தொழில் நுட்பம் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவது என்பதை ஆராய்ச்சி செய்து விவசாயிகள் எவ்வாறு பயன்பெறலாம் என்பதையும் கண்காட்சியில் பங்கேற்று விளக்கி கூறினர்.

(Visited 5 times, 1 visits today)

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி