ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் ஜெர்மனி பெண்ணுக்கு நேர்ந்த கதி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜெர்மனி பெண் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஈஃபிள் கோபுரத்தின் அருகே வைத்து இளம் பெண் மீது பாலியல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த இளம் சுற்றுலாப்பயணி ஒருவர் ஈஃபிள் கோபுரத்தின் அருகே நின்றிருந்தார்.

இதன் போது அவரை ஆண் ஒருவர் நெருங்கியதாகவும், அவருடன் உரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் குறித்த பெண்ணுக்கு, குடிப்பதற்காக வைன் வழங்கியுள்ளார். பின்னர் அவரை நெருங்கி அவர் மீது கைகளை வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், பொலிஸாரை அழைக்கப்பட்டதாகவும், அதையடுத்து குறித்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் அறிய முடிகிறது.

தப்பி ஓடிய நபர் சில நிமிடங்களிலேயே கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

இந்த நிலையில் பாரிஸ் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content