இலங்கை

சிவன் ஆலாயம் இடிக்கப்பட்ட விவகாரம் – அருத்ட்தந்தை சக்திவேல் கண்டனம்!

சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி வடக்கு பிரதேச போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.

இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் கொடூர முகத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்கின் பிரதேசங்களை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்த முனைவதும் , சிங்கள பௌத்த பிரதேசங்களாக அடையாளப்படுத்த முனைவதும் நாம் அறிந்ததே.

நாட்டின் எல்லா சந்திகளிலும், உயர்ந்த மலைகளிலும் புத்தர் சிலைகளை அமைக்கும திட்டமிட்ட செயல் தொடர்கின்றது. மலையக பிரதேசம் ஆக்கிரமிக்கும் நோக்கில் இச் செயற்பாடு தீவிரபடுத்தப்பட்டிருக்கின்றது.

இவற்றிற்கும் மேலாக குருந்தூர் மலைப்பிரதேசத்தில் எத்தகைய கட்டிட பணிகளும் நடக்கக் கூடாது எனும் நீதிமன்ற கட்டளையை மீறி விகாரை அமைக்கும் பணி முடிவுறு நிலையில் உள்ளது. இதுவும் இராணுவத்தின் உதவியுடன் என்பது தெரிய வந்துள்ளது. தமிழ் மக்கள் விடயத்தில் தொல்லியல் திணைக்களம், நீதித்துறை என்பன சட்டங்களுக்கு வெளியில் என்றே சிந்திக்கத் தோன்றுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்