இலங்கை செய்தி

கொட்டகலையில் மலையக தியாகிகள் தினம்: முல்லோயா கோவிந்தன் நினைவாக உணர்வுப்பூர்வமான நினைவேந்தல்

மலையக மக்களின் தொழில், மொழி மற்றும் பொருளாதார உரிமைகளுக்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூரும் ‘மலையக தியாகிகள் தினம்’ இன்று கொட்டகலையில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.

1940 ஜனவரி 10 ஆம் திகதி முல்லோயா தோட்ட சம்பள உயர்வுப் போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட கோவிந்தன் உள்ளிட்ட அனைத்துத் தியாகிகளையும் நினைவுகூர்ந்து ‘பிடிதளராதே’ அமைப்பினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொட்டகலை கொமர்ஷல் வளாகத்தில் நடைபெற்ற பிரதான நினைவேந்தலில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளின் உரைகள் இடம்பெற்றன.

முல்லோயா கோவிந்தனின் தியாகத்தை அடையாளப்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 10 ஆம் திகதியை மலையக மக்கள் தியாகிகள் தினமாகக் கடைபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!