ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு ரொக்கெட்டுக்களை வழங்கிய செர்பியா : விளக்கம் கேட்கும் ரஷ்யா!

ரஷ்யாவின் நட்பு நாடான செர்பியா, ஆயிரக்கணக்கான ரொக்கெட்டுகளை உக்ரைனுக்கு வழங்கியதாக வெளியான செய்திகளை தொடர்ந்து ரஷ்யா அதிகாரப்பூர்வ விளக்கத்தை கோரியுள்ளது.

இது குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், செர்பிய அரசு ஆயுத தொழிற்சாலை ஒன்று சமீபத்தில் துருக்கி மற்றும் ஸ்லோவாக்கியா வழியாக உக்ரைனுக்கு 3500 ஏவுகணைகளை வழங்கியதாக தெரிவித்துள்ளது.

செர்பிய பாதுகாப்பு மந்திரி மிலோஸ் வுசெவிக் இந்த தகவலை மறுத்துள்ளார். இருப்பினும் மூன்றாம் தரப்பின் ஊடகாக வழங்கப்பட்டிருக்கலாம் என அவர் கூறினார்.

இந்நிலையில் இது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள ரஷ்யா, அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் கோரியுள்ளது.

 

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!