இலங்கை

இந்திய முட்டைகளால் இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்

இலங்கையில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகம் என விவசாயத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பறவைக் காய்ச்சல் அதிகம் உள்ள தமிழகத்திலிருந்து முட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் அங்கு முட்டை விலை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை தொடர்பாக இந்தியாவினால் வழங்கப்படும் தரநிலை அறிக்கை இன்று(06) கிடைக்கப்பெறும் என வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறாத காரணத்தினால் முட்டை இறக்குமதியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை இந்திய விலங்குகள் மற்றும் சுகாதாரத் துறை வழங்கவுள்ளது.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!