ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இளைஞர்களால் நெருக்கடி! பல்பொருள் அங்காடிகளில் திருட்டு அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் இளவயதினர் பல்பொருள் அங்காடிகளில் திருடுவதும், பொருட்களின் விலையை மாற்றுவதும் அதிகரித்து வருவதாக மோனாஷ் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்பொருள் அங்காடிகளில் பொருட்களை திருடுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

27 சதவீதம் பேர் பணம் செலுத்தாமல் பொருட்களை எடுத்துச் செல்வதாகவும், 30 வீதமானோர் தயாரிப்புகளின் விலையை மாற்றுவதாகவும், 32 சதவீதம் பேர் சுய சேவை செக்அவுட்களில் பொருட்களை ஸ்கேன் செய்வதில்லை என்றும், 36 சதவீதம் பேர் குறைந்த விலையில் பொருட்களை ஸ்கேன் செய்வதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் சில்லறை திருட்டு 27.6 சதவீதமாக அதிகரித்துள்ளது, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 595,660 சில்லறை திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான திருட்டுக்களை 18 முதல் 34 வயதுடையவர்களில் 56 சதவீதமானோர் நியாயப்படுத்தியுள்ளர். அதேவேளை 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதமானோர் திருட்டு நியாயமற்றது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், ஆய்வினை மேற்கொண்ட தலைவரான ஸ்டெபனி அட்டோ, சில்லறை திருட்டை நியாயப்படுத்த முடியும் என்று நினைக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!