இலங்கையில் இருந்து வேலைக்காக தென்கொரியாவிற்கு படையெடுக்கும் இளைஞர்கள்!

இந்த ஆண்டு 2,927 இலங்கையர்கள் கொரியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன்று அறிவித்துள்ளது.
இந்தக் குழுவில் 100 இளம் பெண்கள் அடங்குவதாக பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, உற்பத்தித் துறையில் 2,197 இலங்கையர்களும், மீன்பிடித் துறையில் 680 பேரும், கட்டுமானத் துறையில் 23 பேரும், விவசாயத் துறையில் இரண்டு பேரும் வேலைவாய்ப்பிற்காக அங்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இம்மாத இறுதிக்குள் மேலும் 200 இலங்கையர்களை வேலைவாய்ப்பு நிமித்தம் தென்கொரியாவிற்கு அனுப்ப பணியகம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம், இந்த மாத இறுதிக்குள் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தென் கொரிய வேலைகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டும் என்று பணியகம் தெரிவித்துள்ளது.
(Visited 3 times, 1 visits today)