இந்தியா செய்தி

கர்நாடகாவில் மூச்சுப்பயிற்சி நுட்பத்தைப் பயன்படுத்தி உயிர் பிழைத்த யோகா ஆசிரியை

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிந்து என்ற பெண்ணுக்கு தனது கணவர் ஒரு யோகா ஆசிரியையுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து தனது நண்பரான சதீஷ் ரெட்டி என்பவரிடம் பிந்து கூறியுள்ளார்.

பெங்களூருவில் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் சதீஷ் ரெட்டி, சம்பந்தப்பட்ட யோகா ஆசிரியையிடம் சென்று யோகா கற்றுக்கொள்வது போல் நடித்து அவருடன் நட்பை ஏற்படுத்தியுள்ளார்.

34 வயதான அந்த யோகா ஆசிரியை சதீஷை முழுமையாக நம்பியிருக்கிறார். அவர் நடத்தும் யோகா வகுப்புகளுக்கு சதீஷ் தவறாமல் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 23ந்தேதி, திபுரஹல்லி பகுதியில் உள்ள யோகா ஆசிரியையின் வீட்டுக்குச் சென்ற சதீஷ், அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு ஊருக்கு வெளியே இருக்கும் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். போகும் வழியில் சதீஷின் நண்பர்கள் 3 பேர் மற்றும் பிந்து ஆகியோர் காரில் ஏறியுள்ளனர்.

இவர்கள் 5 பேரும் சேர்ந்து யோகா ஆசிரியை மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். அவரை ஒரு காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்று, அவரது ஆடைகளை கலைத்துள்ளனர். அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது சமயோசிதமாக செயல்பட்ட யோகா ஆசிரியை, தனது மூச்சை சிறிது நேரம் கட்டுப்படுத்தி மயக்கமடைந்தது போல் நடித்துள்ளார்.

யோகா ஆசிரியை உயிரிழந்துவிட்டார் என நினைத்து, அவரை அங்கேயே அவசர அவசரமாக ஒரு குழியை தோண்டி புதைத்துவிட்டு அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மண்ணுக்குள் புதைந்து கிடந்த யோகா ஆசிரியை, தனக்கு தெரிந்த மூச்சுப்பயிற்சியை பயன்படுத்தி தனது மூச்சை கட்டுப்படுத்தியுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து மண்ணுக்குள் இருந்து வெளியேறி உயிர்தப்பியுள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்த கிராம மக்களிடம் சென்று உதவி கேட்டு ஆடைகளை வாங்கி அணிந்து கொண்ட அவர், தனக்கு நடந்த சம்பவம் குறித்து நேராக காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்த போலிசார், கொலை முயற்சியில் ஈடுபட்ட புகார் தொடர்பாக பிந்து, சதீஷ் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(Visited 34 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி