செய்தி விளையாட்டு

WTC Final – தென் ஆப்பிரிக்கா அணிக்கு 282 ஓட்டங்கள் இலக்கு

உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ரபாடாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 212 ரன்னில் சுருண்டது.

நேற்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 36 ரன்களிலும், பெடிங்காம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த இருவரையும் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார்.

அதன்பின் வந்தவர்கள் தொடர்ச்சியாக வெளியேற தென்ஆப்பிரிக்கா 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின்தங்கியுள்ளது.

பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினர். லபுசேன் (22), கவாஜா (6), கேமரூன் க்ரீன் (0), ஸ்மித் (13), டிராவிட் ஹெட் (9) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

அலேக்ஸ் ஹேரி தாக்குப்பிடித்து 43 ரன்கள் சேர்த்தார். மிட்செல் ஸ்டார்க்கு தாக்குப்பிடித்து விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். இதனால் நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. 9ஆவது விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹேசில்வுட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை வீழ்த்த தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர்கள் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டனர்.

இறுதியாக 207 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஸ்டார்க் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹேசில்வுட் கடைசி விக்கெட்டாக 17 ரன்னில் ஆட்டமிழந்தார். ரபாடா அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார்.

இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஆஸ்திரேலியா 281 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் தென்ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!