உலகம்

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகச்சிறிய பாம்பு

அழிந்துவிட்டது என அறிவியலாளர்களால் கருதப்பட்ட ஆகச் சிறிய பாம்பு, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களின் பார்வையில் பட்டுள்ளது.

பார்பேடாஸ் நூல்பாம்பு எனப்படும் அப்பாம்பு, பார்பேடாசின் மத்தியப் பகுதியில் அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சு கடந்த மார்ச்சில் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு பாறைக்கு அடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பார்பேடாஸ் நூல்பாம்புகள் பார்வைத்திறன் அற்றவை. ஆதலால், அவை மறைந்தே இருக்கும், என்றார் அதனைக் கண்டுபிடித்த பார்பேடாஸ் சுற்றுச்சூழல் அமைச்சின் திட்ட அலுவலர் கானர் பிலேட்ஸ்.

அவை மிகவும் அரிதானவை. 1889ஆம் ஆண்டிலிருந்து சிலமுறை மட்டுமே அவை தென்பட்டுள்ளன. அதனால், பலரும் அதனைப் பார்த்திருக்க முடியாது, என்று அவர் கூறினார்.

உலகின் ஆகச் சிறிய பாம்பினமாகக் கருதப்படும் இவ்வகைப் பாம்புகள், எட்டு முதல் பத்து சென்டிமீட்டர் நீளமே வளரக்கூடியவை.

பின்னர் அப்பாம்பு வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக்கழகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, நுண்ணோக்கி மூலம் ஆராயப்பட்டது.

பார்பேடாஸ் நூல்பாம்புகள் பாலியல் உறவு மூலம் இனப்பெருக்கம் செய்பவை என்றும் அதன் பெண்ணினம் ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடும் என்றும் கூறப்படுகிறது.

(Visited 4 times, 4 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
Skip to content