செய்தி விளையாட்டு

நாளை ஆரம்பமாகும் மகளிர் T20 உலக கோப்பை தொடர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மகளிர் 20 ஓவர் உலககோப்பை போட்டியை 2009ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இங்கிலாந்தில் நடந்த இந்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. கடைசியாக கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 இருபது ஓவர் உலக கோப்பை நடை பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா அதிகபட்சமாக 6 தடவை (2010, 2012, 2014, 2018, 2020, 2023) உலககோப்பையை வென்றுள்ளது.

இங்கிலாந்து (2009), வெஸ்ட் இண்டீஸ் (2016) அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளன.

9வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நாளை தொடங்குகிறது.

வருகிற 20ந் தேதி வரை துபாய், ஷார்ஜாவில் போட்டிகள் நடைபெறுகிறது.

வங்காள தேசத்தில் நடைபெற இருந்த போட்டி அங்கு ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது.

See also  இலங்கை அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

20 ஓவர் உலக கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிக்கப்படுள்ளன. அதன் விவரம்:

ஏ பிரிவு : நடப்பு சாம்பி யன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை.

பி பிரிவு: இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் 15ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது.

முதல் அரை இறுதி அக்டோபர் 17ந் தேதியும், 2வது அரை இறுதி 18ந் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 20ந் தேதியும் நடக்கிறது. மொத்தம் 23 ஆட்டங்கள் நடக்கிறது.

நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் வங்காளதேசம்-ஸ்காட் லாந்து (மாலை 3.30) பாகிஸ்தான்-இலங்கை (இரவு 7.30) அணிகள் மோதுகின்றன.

(Visited 4 times, 4 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content