உலகில் வெப்பமான பகுதிகளில் வாழும் பெண்களுக்கு புற்றுநோய் அபாயம்!

உலகின் வெப்பமான பகுதிகளில் சிலவற்றில் பெண்களுக்கு ஆபத்தான புற்றுநோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் 17 நாடுகளில் புற்றுநோய் போக்குகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், இதனை கண்டறிந்துள்ளது.
இதன்படி பெண்களைப் பாதிக்கும் நான்கு முக்கிய புற்றுநோய்களான மார்பகம், கருப்பை, கருப்பை மற்றும் கர்ப்பப்பை வாய் ஆகியவற்றின் விகிதங்களும் தீவிரமும் அதிகரித்துள்ளதாகக் கண்டறிந்தனர்.
998 மற்றும் 2019 க்கு இடையில் ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வும் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு இரண்டிலும் புள்ளிவிவர ரீதியாக குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் தொடர்புபட்டுள்ளதாகவுகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா 2050 ஆம் ஆண்டுக்குள் 4C வரை வெப்பநிலை அதிகரிப்பை எதிர்கொள்வதால், காலநிலை தொடர்பான சுகாதார அச்சுறுத்தல்களுக்கு அதிகமான மக்கள் ஆளாக நேரிடும் எனவும் சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.