பிரான்சில் இசை நிகழ்வின்போது பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு : 17 பேர் வைத்தியசாலையில்!

பிரான்ஸில் ஒரு இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற தாக்குதலில் 17 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மெட்ஸில் நடந்த உலகளாவிய இசை தின கொண்டாட்டத்தின்போது 50,000இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது 17 பெண்கள் “சிரிஞ்ச் ஊசிகளால் குத்தப்பட்டு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த பெண்கள் அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு 17 தொடக்கும் 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாகவும், அவர்கள் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மெட்ஸின் மேயர் பிரான்சுவா க்ரோஸ்டிடியர் உறுதிப்படுத்தினார்.
மேற்படி தாக்குதலை நடத்தியவரை கண்டறிவதற்காக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.