கருத்து & பகுப்பாய்வு

சமூக ஊடகங்களால் ஆபத்தில் சிக்கும் பெண்கள் – எச்சரிக்கும் ஆய்வு!

சமூக ஊடகங்களில் இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையிலான பதிவுகள், மற்றும் தீங்கு விளைவிக்கும் இடுகைகள் அதிகரித்துள்ளதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.

குறிப்பாக எக்ஸ் தளம் மற்றும் டிக்டொக் உள்ளிட்டவற்றில் பெண்களை பாதிக்கும் வகையிலான உள்ளடக்கங்கள் அதிகரித்திருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

சிறுவர்களை விட பெண்கள் கணிசமாக அதிக தீங்கு விளைவிக்கும் இடுகைகளை எதிர்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை தடுப்பு தொண்டு நிறுவனமான மோலி ரோஸ் அறக்கட்டளை 2000 இளைஞர்கள் மத்தியில் இது தொடர்பான கருத்து சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதில் இளைஞர்கள் “நம்பமுடியாத அளவிற்கு தொந்தரவான அளவில்” தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அல்காரிதம் (Algorithm) முறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 50 சதவீதமான இளைஞர்கள் அல்காரிதம் முறையில் தீங்குவிளைவிக்கும்  உள்ளடக்கங்களை பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

குறைந்த நல்வாழ்வு கொண்டவர்கள் என வகைப்படுத்தப்பட்ட 68 சதவீத சிறுவர்கள் ஒரு வாரத்தில் சுயதீங்கு மற்றும் மனச்சோர்வு உள்ளிட்டவற்றை எதிகொண்டுள்ளதாகவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை