இலங்கை செய்தி

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண், பால்மாவுடன் கைது!

5,000 ரூபா பெறுமதியான பால் மா பொதிகளைத் திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபருடன் திருடப்பட்ட இரண்டு பால் மா பொதிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குருதுவத்தை வோர்ட் பிளேஸில் உள்ள பல்பொருள் அங்காடியில் இரண்டு குழந்தைப் பால் மா பொதிகளைத் திருடிச் சென்ற பெண் ஒருவரைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிடிக்க முற்பட்டபோது அவர் கற்களை வீசித் தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான நிலைமை தோன்றியது.

இது தொடர்பில் குருதுவத்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடைய வெல்லம்பிட்டிய மற்றும் கேகாலை பிரதேசங்களில் இரண்டு முகவரிகளைக் கொண்டவராவார்.

(Visited 20 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை