உத்தரபிரதேசத்தில் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட பெண்
உத்தரபிரதேச(Uttar Pradesh) மாவட்டத்தின் கக்லஹெர்ஹி(Kaglaherhi) பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், 30 வயது பெண் ஒருவர் தனது மகன் மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொஹதிபூரில்(Mohatipur) வசிக்கும் 30 வயதான மணிதா(Manita), கக்லஹெர்ஹி பகுதியைச் சேர்ந்த நீது(Neetu) என்ற நபரை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
சம்பவ தினத்தன்று மணிதா, தனது மைத்துனர் மற்றும் மைத்துனியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு, தனது 6 வயது மகள் நித்யா(Nithya) மற்றும் 4 வயது மகன் கார்த்திகேயா(Karthikeya) ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியேறிய உள்ளார்.
பின்னர் அவர் தனியார் வேலை செய்யும் தனது கணவரை அழைத்து தனது குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில், தங்கள் மகள் மற்றும் பேரக்குழந்தைகளின் மரணத்திற்கு அவரது மைத்துனர் மற்றும் மைத்துனி தான் காரணம் என்று கூறி பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.





