இலங்கை

பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற நிலையில், மீளவும் அதிகரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள்!

சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை முழுவதிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக அரசாங்கத்தால் நடத்தப்படும் சதொசவிலும் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (04.11) இரவு நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்படாத ப்ரவுண் சக்கரை 330 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 295 ரூபாயாகவும், பொதி செய்யப்பட்ட சிவப்பு சர்க்கரையின் விலை 350 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் சீனி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.

பண்டைக்காலம் நெருங்கி வருகின்ற நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மீளவும் அதிகரிக்கப்பட்டிருப்பதானது வாழ்வாதாரத்தில் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக நுகர்வோர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்