விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபியுடன் முடிவுக்கு வரும் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம்?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது கிரிக்கெட் பயணத்தில் மிகவும் கடினமான காலக் கட்டத்தில் உள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடாத கேப்டன் ரோஹித் சர்மா, இரண்டாவது போட்டி முதல் இந்திய அணியுடன் இணைந்தார்.

ரோஹித் சர்மாவுக்கு மட்டுமின்றி, இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் சிறப்பானதாக அமையவில்லை. மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா மீது விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், அவர் சிட்னி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார்.

சிட்னி டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா விலகியதையடுத்து, இந்திய அணியை வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாத பட்சத்தில், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியே ரோஹித் சர்மாவின் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்திய அணி அடுத்து வருகிற ஜூன் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கின்றன. அதனால், அந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்குப் பிறகு இந்திய அணி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன் பின், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பிறகு, வங்கதேசத்துக்கு எதிராக ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணி ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன் பின், நடைபெறவுள்ள மிகப் பெரிய தொடர் 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையே.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. அதன் பின், 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மிகப் பெரிய தொடரான ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின்போது, ரோஹித் சர்மாவுக்கு வயது 40 ஆகிவிடும். அதனால், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரே அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி கிட்டத்தட்ட இழந்துவிட்ட நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரே ரோஹித் சர்மா முன்னிருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் பட்சத்தில், ரோஹித் சர்மா சர்வதேச போட்டிகளிலிருந்து விடைபெறுவதற்கு அது மிகவும் சரியான தருணமாக இருக்கும்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்கு ரோஹித் சர்மா வென்று கொடுக்கும் பட்சத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்தபடியாக அணிக்கு இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்றுக் கொடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமை ரோஹித் சர்மாவைச் சேரும்.

சுருக்கமாக கூறவேண்டுமென்றால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரே ரோஹித் சர்மா கடைசியாக இந்திய அணியின் ஜெர்சியை அணியும் தொடராக இருக்கும் எனக் கூறலாம்.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
Skip to content