உலகம்

நியூசிலாந்தில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ – கட்டுப்படுத்த திணறும் பணியாளர்கள்

நியூசிலாந்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, புகழ்பெற்ற தோங்காரீரொ தேசியப் பூங்கா (Tongariro National Park) சேதமடைந்துள்ளது.

பூங்காவின் சுமார் 1,000 ஹெக்டேர் பரப்பளவைக் கட்டுக்கடங்காத தீயினால் எரித்து நாசமாக்கியுள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பூங்காவின் அமைவிடம் மலைப்பாங்கான மற்றும் கரடுமுரடான பகுதி என்பதால், தீயணைப்பு வீரர்கள் அந்தப் பகுதியை வந்தடைய காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எனினும், விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் (ஹெலிகொப்டர்கள்) மூலம் தண்ணீரைப் பாய்ச்சி, கட்டுக்கடங்காத தீயைக் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனாலும், தீ வேகமாகப் பரவி பல பகுதிகளை அழித்துள்ளது.

இந்த அனர்த்தத்தின் போது, அந்தப் பகுதியில் இருந்த 40 வரையிலான சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மோசமான காலநிலை காரணமாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர காலதாமதம் ஏற்படும் எனத் தீயணைப்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!