இலங்கை

கணவனை கொலை செய்த மனைவி: வெளியான அதிர்ச்சி தகவல்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜிதபுர பகுதியில் நேற்று (23) இரவு கொலைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மனைவி கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

மகஸ்தோட்ட, விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இறந்தவர் வீட்டில் குடிபோதையில் இருந்ததாகவும், பணி முடிந்து இரவு மனைவி வீடு திரும்பியதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அங்கு இறந்தவர் தனது மனைவி தாக்கிய நிலையில் பொறுமையை இழந்து மனைவி அவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், நீதவான் மற்றும் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.

32 வயதுடைய சந்தேகநபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்