அரசியல் இலங்கை செய்தி

பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரணில் ஏன் நிவாரணம் வழங்கவில்லை?

ரணில் விக்கிரமசிங்க பௌத்த தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் தலைவராவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று விசேட ஊடக சந்திப்பை அவர் நடத்தினார்.

இதன்போது பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்திரிக்கா நிதி உதவி வழங்கியுள்ளார். ரணில் என்ன செய்தார் என அவரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த வஜிர அபேவர்தன கூறியவை வருமாறு,

“ ரணில் விக்கிரமசிங்க பௌத்த தர்மத்தின் அடிப்படையில் செயல்படும் தலைவர். எனவே, அவர் எந்த சந்தர்ப்பத்திலும் சொத்துகளை குவிப்பது கிடையாது.

தனது பெயரில் நிதியம் ஆரம்பிக்கமாட்டார். தனது பெயரில் வீதியை திறக்கமாட்டார். மக்களுக்கு அறிவை வழங்குவார்.பணத்தைவிட இதுவே மிக முக்கியம்.

ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவத்தில் இருந்து இந்த அரசாங்கம் பயன் பெறவில்லை. இந்த அரசாங்கத்துக்கு அனுபவமும் இல்லை.” என்றார்.

 

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!