ஈரானின் அடுத்த உச்சத் தலைவர் யார்? : பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை!
ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி உயிரிழந்துள்ளதை தொடர்ந்து அந்த பதவியை ஈடு செய்ய அவருடைய மகனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பொறுப்பான மூத்த மதகுருமார்கள் இணைந்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தற்போதைய சூழலில் அடுத்த தலைவரின் பெயர் அறிவிக்கப்பட்டால் அவர் இஸ்ரேலிய துருப்புகளின் இலக்காக மாற வாய்ப்புள்ளதாகவும், இதன்காரணமாக அந்த விடயங்கள் இரகசியம் காக்கப்படுவதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய ஈரானின் அடுத்த உச்சத் தலைவராக கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) வாரிசு அடிப்படையில் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
நிபுணர்களின் சபை என்று அழைக்கப்படும் மதகுருமார்கள், காலையிலும் மாலையிலும் இரண்டு மெய்நிகர் கூட்டங்களை நடத்தியதாகவும், இதன்போது மேற்படி ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




