ஆட்சி கவிழப்பு குறித்து மைத்திரி கூறுவது என்ன?
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை NPP எளிதில் வீழ்த்திவிடலாம் என எதிரணி கருதுவது யதார்த்தமற்ற விடயமாகும்.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன Maithripala Sirisena தெரிவித்தார்.
எதிரணிகளின் ஒன்றிணைவு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ஆளுங்கட்சி வசம் 159 ஆசனங்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி தன்னை வலுப்படுத்திக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கே அரசாங்கம் முற்படும்.
மறுபுறத்தில் எதிரணிகள் தமது அரசியல் கடமையை நிறைவேற்ற முற்படும். அதற்காக பல கருத்துகள் முன்வைக்கப்படலாம்.
குறிப்பாக ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் கதைக்கப்பட்டாலும் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு எனது ஆட்சிகாலத்தில்தான் ஆரம்பமானது. நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பு அவசியம்.” எனவும் Maithripala Sirisena கூறினார்.





