இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

உக்ரைனில் உள்ள மேற்கத்திய துருப்புக்கள் ரஷ்யாவால் குறிவைக்கப்படுவார்கள் – புட்டின் எச்சரிக்கை

உக்ரைனில் நிறுத்தப்பட்டுள்ள எந்தவொரு மேற்கத்திய துருப்புக்களும் ரஷ்யாவால் குறிவைக்கப்படும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார்.

உக்ரைனின் 26 நட்பு நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக வான், கடல் மற்றும் நிலம் மூலம் துருப்புக்களை அனுப்புவதாக உறுதியளித்துள்ளதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இதனையடுடுத்து, வியாழக்கிழமை விளாடிவோஸ்டாக்கில் நடந்த பொருளாதார மன்றத்தில் ரஷ்ய ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் மோதலில் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்த டொனால்ட் டிரம்பின் முயற்சிகள் வெற்றிபெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டவில்லை என்றாலும், எதிர்கால ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரைனுக்கு ஒரு பாதுகாப்பைத் தயாரிக்க ஐரோப்பிய தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.

இருப்பினும், ஒரு உடன்பாடு எட்டப்பட்டால், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் உட்பட பல நாடுகள் உக்ரைன் மண்ணில் துருப்புக்களை நிறுத்துவதாக வெளிப்படையாக உறுதியளித்துள்ளன.

அதே நேரத்தில் ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஏற்கனவே அத்தகைய நடவடிக்கையை நிராகரித்துள்ளன.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்