செய்தி விளையாட்டு

WC Super 8 – ஆப்கானிஸ்தான் அணிக்கு 182 ஓட்டங்கள் இலக்கு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கள் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் இன்று ஆப்கானிஸ்தான்- இந்தியா மோதுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் – விராட் கோலி களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே தடுமாறினர்.

இதனால் ரோகித் வழக்கம் போல இடதுகை வேகப்பந்து வீச்சாளரான பரூக்கி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பண்ட் வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

11 பந்தில் 20 ரன்கள் விளாசிய பண்ட், ரஷித் கான் ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார்.

அதனை தொடர்ந்து மிகவும் மந்தமாக விளையாடிய விராட் கோலி 24 பந்தில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த துபே 10 ரன்னில் வெளியேறினார்.

இதனையடுத்து சூர்யகுமார் மற்றும் பாண்ட்யா ஜோடி ஆப்கானிஸ்தான் பந்து சிறப்பாக எதிர் கொண்டு ரன்களை குவித்தனர்.

குறிப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் அரை சதம் விளாசினார். அடுத்த பந்தே அவரும் வெளியேறினார்.

32 ரன்னில் இருந்த நிலையில் பாண்ட்யாவும் அவுட் ஆனார்.

இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பருக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content