ஐரோப்பா

ரஷ்யாவின் யூரல் ஆற்றின் நீர் மட்டம் உயர்வு!

ரஷ்யாவின் யூரல் ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்தமையால் ஏற்பட்ட வெள்ளம், கஜகஸ்தானுடனான எல்லைக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் அமைந்துள்ள அணை உடைவுக்கு காரணமாகியது.

இதனால் சுமார் 2,000 மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Orsk மேயர் Vasily Kozupitsa வின் கருத்துப்படி, வெள்ளிக்கிழமை இரவு எல்லைக்கு வடக்கே 20 கிலோமீட்டர் (12.4 மைல்) தொலைவில் Orenburg பகுதியில் உள்ள ஓர்ஸ்க் நகரில் அணை உடைந்ததாக தெரிவித்தார்.

இதனால்  2,400 க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன்   பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஓர்ஸ்கில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள், ஒரு மாடி வீடுகள் நிறைந்த தெருக்களில் தண்ணீர் இருப்பதைக் காட்டியது.

உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, அணை 5.5 மீட்டர் (கிட்டத்தட்ட 18 அடி) நீர் மட்டத்தை தாங்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!