உலகம்

டைட்டானிக் விபத்துக்கு பிறகு மீட்கப்பட்ட கடிகாரம் – அதிக விலைக்கு விற்பனை!

டைட்டானிக் கப்பலில் பயணித்த அமெரிக்க தொழிலதிபருக்கு சொந்தமான  கடிகாரம் ஒன்று 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் இந்த கடிகாரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டைட்டானிக் விபத்திற்கு பிறகு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறன.

அந்தவகையில் குறித்த கடிகாரமே அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட பொருளாகும்.

ஏப்ரல் 14, 1912 அன்று, நியூயார்க்கிற்குப் பயணம் செய்த டைட்டானிக் கப்பல் பனிப்பாறையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் இறந்த தொழிலதிபரின் உடல் சில நாட்களுக்குப் பிறகு அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டெடுக்கப்பட்டது. அவரிடம் இருந்தே குறித்த தங்க கடிகாரம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த கடிகாரமே தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

(Visited 5 times, 6 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!