அறிவியல் & தொழில்நுட்பம்

இயர்போன், ஹெட்போன் அதிக நேரம் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை…!

இயர்போன், ஹெட்போன் போன்ற அதிக ஒலி கொடுக்கும் சாதனங்களை நீண்ட நேரம் தொடர்ந்து பயன்படுத்துவதால், கேட்புத்திறன் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் பொது ஆரோக்கிய இயக்குநர் அதுல் கோயல், அனைத்து மாநிலங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக அதிக நேரம் இயர்போன், ஹெட்போன் அணிந்து பயன்படுத்துவதால், நம் காதுகளின் கேட்புத் திறன் குறைய ஆரம்பிக்கிறது.

முதலில், நுண்ணிய ஒலிகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. இதைத் தொடர்ந்து, நாளுக்கு நாள் கேட்புத்திறன் மந்தமடைகிறது. இதன் பாதிப்பு மெதுவாக உருவாவதால், பலரும் தங்களது கேட்புத்திறன் பாதிக்கப்பட்டுவிட்டதை உணரவே முடியாது.

இதைத் தவிர்ப்பதற்கு: ஒரு நாளில் அதிகபட்சமாக இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே இயர்போன் பயன்படுத்த வேண்டும். தொடர்ச்சியாகப் பயன்படுத்தாமல், இடைவெளி விட்டுப் பயன்படுத்த வேண்டும்.

அதிக சப்தத்துடன் பாடல்கள் கேட்பது, பேசுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உயர்ரக, அதிநவீன இயர்போன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; கூடவே, காதுகளின் பாதிப்பும் அதிகரிக்கிறது. அதனால், முடிந்தவரைக்கும் இயர்போன் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது என்று பொது சுகாதாரத் துறை மற்றும் மருத்துவர்களின் பரிந்துரை ஆக உள்ளது.

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!