இலங்கை சிறுவர்கள் தொடர்பில் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் புத்தாண்டு காலத்தில் சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர்நல வைத்தியர் தீபால் பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக சிறுவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுகளை வழங்கும் போது அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் பெற்றோரை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், அவ்வாறான நோய்தொற்று காணப்படுமாயின் அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 8 times, 1 visits today)