இலங்கையில் இன்றைய காலநிலை தொடர்பில் எச்சரிக்கை

இலங்கையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
அத்துடன் மேல், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.