ஐரோப்பா செய்தி

பிரித்தானியா நோக்கி பயணிக்க முயற்சிக்கும் அகதிகளுக்கு எச்சரிக்கை

பிரித்தானியா நோக்கி சட்டவிரோத பயணம் மேற்கொண்ட 22 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இந்த மரணம் பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆறு அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியிருந்தனர்.

இவ்வருட ஆரம்பத்தில் மொத்தமாக 22 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.இந்த எண்ணிக்கை சென்ற 2023 ஆம் மொத்த ஆண்டில் பதிவான பலி எண்ணிக்கையை விட அதிகமாகும்.

அகதிகளின் பயணம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாகவும், 2022 ஆம் ஆண்டில் படகு ஒன்றில் சராசரியாக 41 பேர் பயணித்ததாகவும், அந்த எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 49 ஆக உயர்வடைந்ததாகவும், நடப்பு ஆண்டில் படகு ஒன்றில் 63 பேர் வரை பயணிப்பதாகவும், இந்த எண்ணிக்கை கவலை அளிப்பதாகவும், ஆபத்து நிறைந்தது எனவும் பா-து-கலே மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!