உலகம்

போர்ச் சூழல்: மத்திய கிழக்கு சுற்றுலாத்துறைக்கு பேரிழப்பு!

போர்ச் சூழலால் மத்திய கிழக்கின் சுற்றுலாத்துறை நாளொன்றுக்கு 600 மில்லியன் டொலர்வரை பேரிழப்பை சந்தித்து வருகின்றது என தெரியவருகின்றது.

the World Travel and Tourism Council (WTTC) மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.

வான்வழிப் போக்குவரத்து முடக்கம் மற்றும் சர்வதேசப் பயணிகளின் வருகை குறைவு ஆகியவையே இதற்கான முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

வான்வெளி மூடப்பட்டதால் கே.எல்.எம் மற்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற முக்கிய நிறுவனங்கள் தங்களின் விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.

பாதுகாப்பு சார்ந்த நெருக்கடிகள் நீங்கிய பின், பயணிகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பதன் மூலம் சில மாதங்களிலேயே பழைய நிலையை அடைய முடியும் என துறைசார் நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இக்கட்டான இந்த சூழலிலும் சுற்றுலாத்துறையின் நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்ய சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், மத்திய கிழக்கில் இன்று 13 ஆவது நாளாகவும் போர் தொடகின்றது.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!