உலகம்

இந்தோனேசியாவில் 2 நாட்களில் 8 முறை குமுறிய எரிமலை – மக்களுக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் 2 நாட்களில் 8 முறை எரிமலை குமுறியுள்ளதால் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மவுண்ட் லெவோடொபி லகி-லகி எரிமலையின் எச்சரிக்கை நிலை அதிகபட்ச நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள Flores தீவில் மலை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் எரிமலைச் சாம்பல் சுமார் 3 கிலோமீட்டர் முதல் 5.5 கிலோமீட்டர் உயரம் வரை பறந்தது.

எரிமலை தொடர்ந்து துடிப்புடன் இருப்பதால் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டதாய் எரிமலை கண்காணிப்பு ஆணையம் தெரிவித்தது.

நேற்று எரிமலை மீண்டும் வெடித்தது. அந்த வட்டாரத்தில் இதுவரை குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படவில்லை.

விமானச் சேவைகளும் ரத்து செய்யப்படவில்லை. லவோடொபி லகி-லகி எரிமலை கடந்த ஆண்டு நவம்பரிலும் வெடித்த நிலையில் அப்போது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

(Visited 6 times, 6 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்