இலங்கை செய்தி

இஸ்ரேல், ஈரான் வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித ஹேரத் பேச்சு!

 

இஸ்ரேல் Israel மற்றும் ஈரான் Iran ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath பேச்சு நடத்தியுள்ளார்.

தொலைபேசி ஊடாகவே நேற்று இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான தகவல்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் அமைச்சர் விஜித ஹேரத் வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடனான கலந்துரையாடலின்போது, அந்நாட்டிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்குரிய உத்தரவாதம் வழங்கப்பட்டது என அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

அதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சருடனான கலந்துரையாடலின்போது பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலை இராஜதந்திர ரீதியில் கையாண்டு, அமைதியை நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்துவம் பற்றி பேசப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிலுள்ள ஏனைய சில நாடுகளின் , வெளிவிவகார அமைச்சர்களுடனும் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!