டெல்லி பறந்தார் விஜய்!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று (14) டெல்லி சென்றுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் கரூரில் பிரசாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் CBI-யினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வழக்கு தொடர்பாக விஜய் ஏற்கனவே 2 முறை டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கம் அளித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, நாளை(15) நேரில் முன்னிலையாகுமாறு த.வெ.க. தலைவர் விஜய்க்கு CBI அழைப்பாணை விடுத்திருந்த நிலையில், இன்று அவர் டெல்லி சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





