திருமண பந்தத்தில் இணைந்தது விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி
நடிகர் விஜய் தேவரகொண்டா Vijay Deverakonda , நடிகை ராஷ்மிகா மந்தனா Rashmika Mandanna ஆகியோரது திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
கடந்த சில தினங்களாக உதய்பூரில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் திருமண வைபவங்கள் நடைபெற்று வந்தன.
இதில் இருவரது குடும்பத்தினரும் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று (26)முற்பகல் 10:10 மணிக்கு இருவரது திருமணமும் நடைபெற்றது.
புது மண தம்பதியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், தொழிலதிபர் அம்பானி தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார்.
திருமணத்தைத் தொடர்ந்து எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.
இதில் ஒட்டுமொத்த திரையுலகினரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.





