இலங்கை

மீண்டும் வந்தார் வடிவேல் சுரேஷ்: அரசுக்கு ஐஸ் வைப்பு!

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேல் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

“சம்பள நிர்ணயசபைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது எமது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்த்தோம். எனினும், அது நடக்கவில்லை. இருந்தாலும் நாம் பொறுமை காக்கின்றோம். ஜனாதிபதி தான் வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவார் என நம்புகின்றோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்தபோது அடிப்படை நாள் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தேன்.” என்றார் வடிவேல் சுரேஷ்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!