நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு
நைஜீரியாவில்(Nigeria) கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதால் மேற்கு ஆப்பிரிக்க நாட்டை வெளியுறவுத்துறை கண்காணிப்பு பட்டியலில் சேர்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) குறிப்பிட்டுள்ளார்.
“நைஜீரியாவில் கிறிஸ்தவம் இருத்தலியல்(existential) அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த படுகொலைக்கு தீவிர இஸ்லாமியர்களே காரணம்” என்று டிரம்ப் தந்து ட்ரூத் சோஷியல்(Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஆப்பிரிக்காவின் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இருக்கும் நைஜீரியாவை, மத சுதந்திர மீறல்களில் ஈடுபட்டுள்ள நாடுகளின் பட்டியலில் சேர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
குறித்த பட்டியலில் சீனா(China), மியான்மர்(Myanmar), வட கொரியா(North Korea), ரஷ்யா(Russia) மற்றும் பாகிஸ்தான்(Pakistan) ஆகிய நாடுகள் அடங்கும்.





