உலகம்

ஏமனில் அமெரிக்கா – பிரிட்டிஷ் படையினர் கூட்டு வான்வழித் தாக்குதல்: 16 பேர் பலி!

ஏமனில் அமெரிக்க – பிரிட்டிஷ் படையினர் கூட்டு விமானத் தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏமன் தலைநகர் சனா மற்றும் ஒரு முக்கிய துறைமுக நகரம் உட்பட அந்நாட்டின் பல்வேறு தளங்களில் நேற்று இரவு துவங்கி இன்று அதிகாலை வரை அமெரிக்கா – பிரிட்டிஷ் படையினர் இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் 16 பேர் கொல்லப்பட்டதாக பிரிட்டன் அதிகாரிகள் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சேனல் அல்-மசிரா வெளியிட்டுள்ள தகவலில், டேஸ் நகரில் உள்ள தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பலர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பிராந்திய ஊடகங்களின் சுயாதீனமான விசாரணையில் இந்த தகவலை உடனடியாக உறுதிப்படுத்த இயலவில்லை.

அமெரிக்கா, பிரிட்டிஷ் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு செல்லும் அனைத்து கப்பல்களையும் ஹுதி கிளர்ச்சியாளர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக கடந்த ஜனவரி முதல் ஏமனில் உள்ள ஹுதி இலக்குகள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. எனினும் இந்த தாக்குதல் ஹுதி கிளர்ச்சியாளர்களை முழுமையாக கட்டுப்படுத்தவில்லை.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!