ஐரோப்பா

உக்ரைன் போரில் திடீர் திருப்பம் – அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார்: புட்டின் அறிவிப்பு

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டுமென என புட்டின் நிபந்தனை விதித்துள்ளார்.

மொஸ்கோவில் இராணுவம் தொடர்பான இணையதள பிளாக்கர்களுடன் உரையாடிய அவர், ரஷ்ய ஆயுதங்களின் தரம் தற்போது மேம்பட்டுள்ளது.

அதேநேரத்தில் டிரோன் மற்றும் துல்லிய தாக்குதல் தொடர்பான ஆயுத தயாரிப்பில் பின்தங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா வழங்கிய ஹிம்மர் ராக்கெட்டுகள் மூலம் ககோவ்கா அணையை உக்ரைன் தகர்த்துள்ளதாக குற்றம்சாட்டிய புட்டின், எதிர்த்தாக்குதலை தீவிரப்படுத்தியபிறகு ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் உக்ரைனுக்கு 10 மடங்கு உயிரிழப்பு அதிகம் என்றும் கூறினார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!