பாதுகாப்பு சேவை தலைமையகத்தில் அசாதாரண துர்நாற்றம்: 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஸ்வீடனின் பாதுகாப்பு சேவை தலைமையகத்தில் மர்மமான சம்பவமொன்று இடம்பெற்று பொலிஸ் அதிகாரிகள் உட்பட 8 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அசாதாரண துர்நாற்றம் வீசுவதாக தொழிலாளர்கள் தெரிவித்ததை அடுத்து, 500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இது முதலில் சந்தேகத்திற்கிடமான வாயு கசிவு என தெரிவிக்கப்பட்டது, ஆனால் கட்டிடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வாயு எதுவும் கண்டறியப்படவில்லை என்று பாதுகாப்பு சேவைகள் தெரிவித்தன.
இந்த எச்சரிக்கைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)