இலங்கை

சீரற்ற காலநிலை – மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 877 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எழுவர் காயமடைந்துள்ளனர்.

மண்சரிவு , மரம் முறிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களாலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

4 வீடுகள் முழுமையாகவும், 250 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலையால் 33 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் மூன்று தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அடுத்து சில நாட்களுக்கு சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!