உலகம்

ஈரானில் நிலவும் அமைதியின்மை – 68 பேர் பலியானதாக அறிவிப்பு!

ஈரானில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக 48 போராட்டக்காரர்கள் மற்றும் 14 பாதுகாப்புப் படையினர் உட்பட 68 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியின்மையை தவிர்க்க அதிகாரிகள் இணையத்தை முடக்கியுள்ளனர். இந்நிலையில் ஈரான் வெளி உலகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள நகரங்களில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதால், கட்டிடங்கள் தீப்பிடித்து எரிவதைக் காட்டும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பின்வாங்கப் போவதில்லை என்று சபதம் செய்துள்ளார்.  ஆர்ப்பாட்டக்காரர்கள்,  புலம்பெயர்ந்த எதிர்க்கட்சிக் குழுக்கள் அமெரிக்காவிற்கு சார்பாக செயற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை ஈரானில் நாசவேலையில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்  என்று அரசத்துறை வழக்கறிஞர் ஒருவர் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!