இலங்கை செய்தி

யூனியன் கல்லுாரி விவகாரம் – பொலிஸ் அதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லுாரியின் இல்ல விளையாட்டு போட்டியில் இடம்பெற்றிருந்த இல்ல அலங்காரம் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

பொலிஸார் சட்டத்தை மீறி பாடசாலைக்குள் நுழைந்ததுடன், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களை விசாரணைக்கு அழைத்த மைக்காக பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிகைள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய,

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளார். இதன்படி நாளை 5ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்கும்படி அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை