உலகம்

செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழுவை அமைத்துள்ள ஐ.நா

ஐநா எனும் ஐக்கிய நாட்டு நிறுவனம் செயற்கை நுண்ணறிவு ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த முடிவுகளை எடுக்க நாடுகளுக்கு உதவுவதற்கு இக்குழு செவ்வாய்க்கிழமை (26) உருவாக்கப்பட்டது.

வாழ்க்கைப் போக்கை மாற்றியமைக்கக்கூடியதாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவின் அதிவேக வளர்ச்சி குறித்து ஐநா உறுப்பு நாடுகள் கவலை தெரிவித்தன. ஜனநாயக முறை, மனித உரிமை ஆகியவற்றுக்கு செயற்கை நுண்ணறிவு பங்கம் விளைவிக்கக்கூடும் என்பது அவற்றின் அச்சம்.

அதனைத் தொடர்ந்து செயற்கை நுண்ணறிக் ஆலோசனைக் குழுவை அமைக்க ஐநா உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. இக்குழுவில் வல்லுநர்களாக விளங்கும் விஞ்ஞானிகள் இடம்பெறுவர். அந்த விஞ்ஞானிகள், செயற்கை நுண்ணறிவு குறித்து அரசாங்கங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த ஆதரவளிப்பர்.

அனைத்துலக சுயேச்சை செயற்கை நுண்ணறிவு அறிவியல் குழுவை அமைப்பதற்கு வரையப்பட்ட தீர்மானத்துக்கு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. 40 பேர் இடம்பெறவுள்ள இக்குழுவில் உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இனி ஈடுபடுவார்.

குழு உறுப்பினர்கள் மூவாண்டு காலத்துக்குப் பொறுப்பு வகிப்பர்.

(Visited 1 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்