உலகம் செய்தி

ஈரான் ட்ரோன்களை வீழ்த்த உக்ரைன் இராணுவம்: புதிய திட்டம் வகுப்பு!

உக்ரைன் ஜனரிபதி வோலோடிமிர் செலன்ஸ்கி Ukrainian President Volodymyr Zelensky தமது நாட்டின் இராணுவ வல்லுநர்களை வளைகுடா நாடுகளில் களமிறங்க திட்டமிட்டுள்ளார்.

ஆளில்லா விமானங்களைச் Drones சுட்டு வீழ்த்துவதில் தங்களுக்குள்ள தனித்துவமான அனுபவத்தைப் பகிரும் வகையிலேயே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

ரஷ்யாவுடனான நீண்டகாலப் போரின் மூலம் உக்ரைன் பெற்றுள்ள இந்தத் தொழில்நுட்பத் திறன், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம் என்று அவர் கருதுகிறார்.

ஈரானின் அண்மைக்காலத் தாக்குதல்களுக்குப் பிறகு, இத்தகைய தற்காப்பு உத்திகளைக் கற்றுக்கொடுக்க உக்ரைன் முன்வந்துள்ளது.

எனினும், இந்த இராணுவ உதவி என்பது ஒரு பரஸ்பர ஒப்பந்தமாகவே இருக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

உக்ரைனிடம் உதவி கோரும் நாடுகள், பதிலுக்கு அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பலப்படுத்த ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் சர்வதேச நாடுகளுடனான தனது பாதுகாப்பு உறவை மேம்படுத்தவும், போருக்கான ஆதரவைத் திரட்டவும் உக்ரைன் முயல்கிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!