ஐரோப்பா

முடிவின்றி தொடரும் உக்ரைன் – ரஷ்ய போர் : அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு புட்டின் போடும் திட்டம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், நாட்டின் ராணுவத்தின் அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்காக 18-30 வயதுக்குட்பட்ட 160,000 இளைஞர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷ்யாவிற்குள் சேர்க்கப்படும் அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்கள் ஆகும்.

ரஷ்யா தனது இராணுவத்தின் மொத்த அளவை கிட்டத்தட்ட 2.39 மில்லியனாகவும், செயலில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 1.5 மில்லியனாகவும் அதிகரிக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ளார்.

அது அடுத்த மூன்று ஆண்டுகளில் 180,000 அதிகரிப்பு ஆகும், மேலும் ரஷ்யா இதை “சிறப்புப் படை நடவடிக்கை” என்று அழைத்துள்ளது.

உக்ரைனுடனான தற்போதைய இராணுவ நிலைமைக்கு இந்த துருப்புக்களை அனுப்ப வேண்டாம் என்று ரஷ்ய ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!